NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
    சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் விளக்கம்

    தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 06, 2025
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

    அமர்வின் தொடக்கத்தின் போது இசைக்கப்பட்ட பாடல்களின் வரிசையில், முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ரவி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனால் ஆளுநர் ரவி சட்டசபையை விட்டு வெளியேறினார்.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், இந்திய அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    தேசிய ஒற்றுமையின் இந்த சின்னங்களை நிலைநிறுத்துவது ஒரு அடிப்படை கடமை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு

    அரசியலமைப்பு நடைமுறை

    அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப, அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது பாரம்பரியமாக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நெறிமுறையை கடைபிடிக்குமாறு கவர்னர் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், சட்டசபை சபாநாயகர் மற்றும் முதல்வர் அதை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவம் ராஜ்பவனில் இருந்து கடுமையான வார்த்தைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட வழிவகுத்தது. முதலில் ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கை வெளியிட்ட நிலையில், அது சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மீண்டும், அதே கவலைகளை வெளிப்படுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. பேரவையின் முடிவின் மீது ஆளுநரின் அதிருப்தியை அந்த அறிக்கை வலியுறுத்தியது.

    இது மிகவும் கவலைக்குரிய விஷயம் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளை புறக்கணிப்பது என்று விவரித்தது.

    embed

    ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பதிவு

    The Constitution of Bharat and the National Anthem were once again insulted in the Tamil Nadu Assembly today. Respecting the National Anthem is among the first Fundamental Duty as enshrined in our Constitution. It is sung in all the state legislatures at the beginning and the end...— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஆர்.என்.ரவி

    ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி  முர்மு திறந்து வைக்கிறார் சென்னை
    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  நீட் தேர்வு

    தமிழ்நாடு

    "6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு
    தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம் சுற்றுலாத்துறை
    டிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தமிழக அரசு

    தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்  பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு
    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம் சென்னை

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழ்நாடு
    மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை பொங்கல் பரிசு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025