NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி

    மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 17, 2024
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    மேலும், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

    அசாமில் உள்ள சில்சாரில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, ​​நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே ஒரு சரக்கு ரயில் அதன் பின்னால் இருந்து மோதியது.

    காஞ்சன்ஜங்கா ரயிலின் பின்புற பெட்டிகளில் இருந்த இரண்டு பார்சல் வேன்கள் மற்றும் ஒரு காவலர் பெட்டி கவிழ்ந்தது.

    முதற்கட்ட விசாரணையின் படி, சிக்னலை மீறி வந்த சரக்கு ரயில், காஞ்சன்ஜங்கா ரயிலை பின்னால் இருந்து மோதியதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளம் 

    'மருத்துவ உதவிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது': மம்தா  பானர்ஜி 

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    "டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்த மேலும் விவரங்கள் வெளியாத நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. டிஎம், எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மருத்துவ உதவிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது," என்று முதல்வர் மம்தா பானர்ஜி X இல் பதிவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    இந்தியா

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மேற்கு வங்காளம்

    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி

    இந்தியா

    பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்  பாஜக
    "மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு  மல்லிகார்ஜுன் கார்கே
    மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து  பிரதமர் மோடி
    ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025