NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 02, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம், ஓமலூர் பகுதியினை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு காதல் விவகாரத்தால் ஆணவ கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த பொழுது, யுவராஜ் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு குறித்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு போன்ற ஆதாரங்கள் சேகரித்ததில் குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று வாதாடினார்.

    ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீர்க்கமாக கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக வாதிட்டார்.

    தீர்ப்பு 

    கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த நீதிபதிகள் 

    இதனையடுத்து, கோகுல்ராஜின் நெருங்கிய தோழியினை முக்கிய சாட்சியாக கொண்டு நீதிபதிகள் வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பிறழ் சாட்சி கூறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்தது.

    தொடர்ந்து, கோகுல்ராஜ் சடலமாக கிடந்த ரயில் தண்டவாளம், அவர் கடைசியாக சென்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி 10 பேரின் ஆயுள் தண்டனையினை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    மதுரை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    மதுரை

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது பொங்கல் திருநாள்
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி காவல்துறை
    2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம் பட்ஜெட் 2023
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி

    சென்னை உயர் நீதிமன்றம்

    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு தமிழ்நாடு
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மத்திய பிரதேசம்
    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025