NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது.

    இதில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமானநிலைய முனையத்தில், விமானத்திற்கு அழைத்து செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர்.

    ஆனால் அவர்களை ஏற்றாமல் இந்த விமானம் கிளம்பி டெல்லிக்கு சென்றுள்ளது.

    பயணிகளை ஏற்றாமல் அவர்களது உடமைகளை மட்டும் ஏற்றிக்கொண்டு இந்த விமானம் சென்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இது குறித்து மன்னிப்பு கோரிய 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அந்த விமானத்தில் இருந்து அனைத்து பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

    தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 55 பயணிகள் அடுத்த ஓராண்டிற்கு இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் விமான நிறுவனம் அறிவித்தது.

    அறிக்கை வெளியீடு

    ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி

    இந்நிலையில், பயணிகளை விட்டு சென்ற விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது.

    இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விமானத்தில் பயணிகளை ஏற்றி செல்வது குறித்து முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதே போல், ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணிகள் சிறுநீர் கழித்த விவகாரத்தில் மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    இந்தியா

    வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல் இந்தியா
    கூகுளின் முன்னாள் உயர் அதிகாரியின் வைரல் ட்வீட்: நெகிழ்ச்சியில் இணையவாசிகள் ட்விட்டர்
    வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி வைரல் செய்தி
    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025