Page Loader
விருது பெற்ற தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்
செய்தி தொகுப்பாளராக பணியாற்றியதோடு, தேசிய நாடகப் பள்ளியில்(NSD) டிப்ளமோ பட்டமும் பெற்றார்.

விருது பெற்ற தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

தூர்தர்ஷனில் பணி புரிந்த இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் நேற்று(ஜூன் 7) காலமானார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கீதாஞ்சலி, நடைபயிற்சி முடித்து விட்டு வீடு திரும்பியவுடன் திடீரென்று மயங்கி விழுந்தார். கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், 1971 இல் தூர்தர்ஷனில் சேர்ந்தார். இவர் நான்கு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் 1989இல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார். செய்தி தொகுப்பாளராக பணியாற்றியதோடு, தேசிய நாடகப் பள்ளியில்(NSD) டிப்ளமோ பட்டமும் பெற்றார். கீதாஞ்சலி ஐயர் பல செய்தித்தாள் விளம்பரங்களுக்கு மாடலிங் செய்தது மட்டுமல்லாமல், ஸ்ரீதர் க்ஷிர்சாகரின் தொலைக்காட்சி நாடகமான "கந்தான்" என்பதிலும் நடித்திருக்கிறார்.

details

அவரது மகள் பல்லவி ஐயரும் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர் ஆவார்

கீதாஞ்சலி ஐயரின் மரணத்திற்கு பலரும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். "கீதாஞ்சலி ஐயர் அவர்கள் எங்கள் தொலைக்காட்சித் திரைகளை அலங்கரித்த நாட்களை நாங்கள் அன்புடன் நினைவுகூர்கிறோம். எங்களது செய்தி பார்க்கும் அனுபவங்களில் அவர் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவரது அகால மறைவால் வருந்துகிறேன். அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று காங்கிரஸ் தலைவர் நெட்டா டிசோசா ட்வீட் செய்துள்ளார். கீதாஞ்சலி ஐயருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவரது மகள் பல்லவி ஐயரும் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர் ஆவார்.