NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்
    கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்

    கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்

    எழுதியவர் Nivetha P
    Sep 10, 2023
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண தொகையினையும் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதத்தூர் கிராமத்திலுள்ள கோயிலில் இன்று(செப்.,10)காலை கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

    அப்போது இதன் அருகில் உள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரையானது காவனூர் கிராமத்தினை சேர்ந்த சுதந்திரதேவி(15)என்னும் சிறுமி மீது விழுந்துள்ளது.

    சிகிச்சைக்காக அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்னும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நிவாரண தொகை 

    கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/JGILzUHmpS

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    கடலூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு
    மகளிர் உரிமைத்தொகை திட்டம் - காஞ்சிபுரத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி  கலைஞர் கருணாநிதி
    திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு  தமிழக அரசு

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025