NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு

    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2024
    02:12 pm

    செய்தி முன்னோட்டம்

    31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தங்கள் மகன் பீம் சிங்குடன் காசியாபாத் குடும்பம் மீண்டும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில், தற்போது 40 வயதாகும் பீம் சிங், 1993 இல் பள்ளியிலிருந்து திரும்பும் போது ஒன்பது வயதில் கடத்தப்பட்டார்.

    பல வருட விரக்திக்குப் பிறகு, பீமின் தங்கை ஹேமா, உள்ளூர் செய்தித்தாள் கட்டுரையில் அவரது சாயலில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை அடையாளம் கண்டுகொண்டபோது, குடும்பத்தின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது.

    இதையடுத்து காவல்துறை உதவியுடன் பீம் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    எனினும், பீமின் தந்தை துலாரம், கூடுதல் உறுதிப்படுத்தலுக்கு டிஎன்ஏ சோதனையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    கண்டுபிடிப்பு

    காணாமல் போன சிறுவன் 40 வயதில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?

    1993இல் சிறுவனாக இருந்த பீம் சிங் கடத்தப்பட்ட பின்னர், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் கால்நடை மேய்க்கும் கொத்தடிமையாக மாற்றப்பட்டுள்ளார்.

    அங்கிருந்து தப்பிக்க மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால், நீண்ட காலம் அங்கேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஒரு ட்ரக் டிரைவரை வழியில் சந்தித்தபோது தனது கதையை சொன்ன பீம் சிங்கை, அந்த டிரைவர் காப்பாற்றி டெல்லி வரை கொண்டு வந்துள்ளார்.

    அங்கிருந்து காசியாபாத் போலீசை அடைந்த பீம் சிங், தனது கதையை கூற, அதன்பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.

    காவல் நிலையத்தில், பீம் தனது தாய் மற்றும் சகோதரிகளை உடனடியாக அடையாளம் காட்டினார்.

    அவரது தாயார் விவரித்த மச்சம் மற்றும் வடுக்கள் உட்பட அவரது உடல் அடையாளங்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    டிரெண்டிங்
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரப்பிரதேசம்

    100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்  பல்கலைக்கழகம்
    "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள்  இந்தியா
    'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம்  இந்தியா
    அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு காங்கிரஸ்

    இந்தியா

    இந்தியாவில் ₹8.8 லட்சத்தில் அறிமுகமானது கவாஸாகி ZX-4R: அதன் அம்சங்கள் இதோ கவாஸாகி
    தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது  பிரசார் பாரதி ஓடிடி
    இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம் ஆஸ்திரேலியா
    மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு? மகாராஷ்டிரா

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இந்தியா

    டிரெண்டிங் கதை

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025