NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

    அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

    பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பாம்ரகாட் தாலுகாவில் உள்ள அரேவாடா கிராமத்தைச் சேர்ந்த மண்டோஷி கஜேந்திர சவுத்ரி (24) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார்.

    அங்கு இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தது நிலைமையை மோசமாக்கியது.

    இதற்கிடையே, உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் இடுப்பளவு தண்ணீரில் ஒருவழியாக அவரை சிரமப்பட்டு பாம்ரகாட் கிராமப்புற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அரிய வகை ரத்தம்

    தாய்க்கு அரிதான பி-நெகட்டிவ் இரத்தம் தேவை

    அங்கு அவர் திங்கட்கிழமை குழந்தையைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார். குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுத்தாலும், பிரசவத்தின் போது அந்த பெண் அதிக இரத்த இழப்பை சந்தித்தார்.

    அதற்காக அவருக்கு அவசரமாக குறைந்தது ஒரு யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. அவருக்கு அரிதான பி-நெகட்டிவ் ரத்த வகை இருப்பது தெரிய வந்ததால் நிலைமை மேலும் சிக்கலானது.

    மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த இரத்த வகை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாம்ரகாட்டில் உள்ள மருத்துவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கட்சிரோலி மாவட்ட மருத்துவமனையில் அரிய வகை பி-நெகட்டிவ் ஒரே ஒரு யூனிட் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

    காவல்துறை

    ஹெலிகாப்டர் மூலம் உதவிய காவல்துறை

    இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை வழியாக ரத்தம் கொண்டுவரவே முடியாது எனும் சூழலில் அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    இந்நிலையில், புதன்கிழமை காலை மழை நின்று வானிலை திடீரென தெளிவடைந்ததை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய கட்சிரோலி காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் ஒரு யூனிட் பி-நெகட்டிவ் ரத்தத்தை நோயாளிக்கு பாதுகாப்பாக கிடைக்கும்படி செய்தது.

    இதையடுத்து தற்போது தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை அவரே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, காவல்துறை ஹெலிகாப்டர் மூலம் உதவிய செயல் வெளியே தெரிந்து மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    காவல்துறை
    காவல்துறை
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல் போதைப்பொருள்
    "ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை தேசியவாத காங்கிரஸ் கட்சி
    நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்  இந்தியா
    70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது கொலை

    காவல்துறை

    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை  ஆஸ்திரேலியா
    இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக பரவிய அமித் ஷாவின் வீடியோ: காவல்துறை வழக்கு பதிவு  அமித்ஷா
    ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம் கொலை

    காவல்துறை

    கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு  நியூயார்க்
    பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன் பாலியல் தொல்லை
    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  கர்நாடகா
    சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்  பாஜக

    இந்தியா

    வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு  எரிவாயு சிலிண்டர்
    எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் மூன்று நாட்கள் அமெரிக்க பயணம் ராகுல் காந்தி
    8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா ஆந்திரா
    14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025