Page Loader
G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன? 
மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணமாகும்

G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன? 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 14, 2024
11:37 am

செய்தி முன்னோட்டம்

50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார். இது தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அவரின் முதல் வெளிநாட்டு பயணமாகும். இத்தாலியின் அபுலியா பகுதியில் ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அட்டவணை

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஜி7 அவுட்ரீச் அமர்வில் தனது நாளைக் கழிக்க உள்ளார். "செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா-மத்திய தரைக்கடல்" என்ற தலைப்பிலான உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இத்தாலிய பிரதமர் மெலோனி தொகுத்து வழங்க, இவர்களுடன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைவார். இத்தாலிக்கு புறப்படும் முன்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்த நிகழ்விற்கான தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். "சக உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்கும், நமது உலகத்தை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்ட பலதரப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

விவாதங்கள்

மோடியின் இருதரப்பு பேச்சுக்கள் மற்றும் சாத்தியமான தொடர்புகள்

மெலோனி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுகள் இருப்பதாக ஊகிக்கப்பட்டாலும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. G7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பிரதமர் உரையாற்றுவார், மேலும் இந்தியா-இத்தாலியின் மூலோபாய கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதற்கும் இந்தோ-பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பிராந்தியங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திவார். இருப்பினும், ஜூன் 15 முதல் 16 வரை சுவிட்சர்லாந்து நடத்தும் உக்ரைன் அமைதி மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார்.

தகவல்

இந்தியாவின் 11வது G7 உச்சி மாநாடு

G7 (குரூப் ஆஃப் செவன்) அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக இல்லாவிட்டாலும், வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, கென்யா, மொரிட்டானியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சில சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியா ஒரு அவுட்ரீச் கன்ட்ரியாக அழைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். இது இந்தியாவின் 11வது ஜி7 உச்சி மாநாடாகும்.