Page Loader
மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்: பாதுகாப்பு படைகளை எதிர்த்து நின்று சண்டையிடும் தாக்குதல்காரர்கள்

மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்: பாதுகாப்பு படைகளை எதிர்த்து நின்று சண்டையிடும் தாக்குதல்காரர்கள்

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2024
04:05 pm

செய்தி முன்னோட்டம்

மணிப்பூரின் எல்லை நகரான மோரேயில் இன்று நடந்த தாக்குதலில் மணிப்பூர் காவல்துறை கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். மோரே அருகே உள்ள பாதுகாப்புச் சாவடி மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்தியவர்கள் இன்று வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்காலிக கமாண்டோ போஸ்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்பிஜி குண்டுகளை வீசியதாகவும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்த வழக்கில் இரண்டு பழங்குடியினர் கைது செய்யப்பட்டதை அடுத்து, குக்கி குழுக்களின் பெரிய எதிர்ப்புகளால் மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில், மோரே நகருக்குள் நுழையும் பாதுகாப்பு படையினரை ஆயுதமேந்தியவர்கள் பின்னுக்கு தள்ளும் வீடியோ இன்று வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இன்று காலை தொடங்கிய மணிப்பூர் வன்முறை சம்பவங்களின் வீடியோ