NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்
    தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்

    தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 11, 2023
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டு வந்த நிலையில், இந்தக் கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறுவதாக நேற்று (ஜூலை 10) அறிவித்தது ஃபாக்ஸ்கான்.

    அதனைத் தொடர்ந்து தற்போது, இந்தியாவில் தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்த, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மானியத்தை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, செமிகண்டக்டர்களைத் தயாரிப்பதற்காக ஆகும் மூலதனச் செலவுகளில் 50%தை மானியமாக வழங்கவிருக்கிறது மத்திய அரசு.

    இந்தத் திட்டத்தின் கீழ் புதிய தொழிற்சாலையை அமைக்க விரைவில் விண்ணப்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்.

    வணிகம்

    இந்தியாவின் முக்கிய நோக்கம்: 

    இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த செமிகண்டக்டர் தயாரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதை மிக முக்கியமான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

    இனி வரும் காலங்களில் எலெக்ட்ரானிக் பொருட்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், அதற்கான செமிகண்டக்டர் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என நினைக்கிறது மத்திய அரசு.

    வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் இந்த புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது ஃபாக்ஸ்கான்.

    வேதாந்தா நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறியதிலும் தங்களுக்குப் பின்னடைவு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கும் அந்நிறுவனம், இந்திய நிறுவனங்களுடனும் கூட்டணி அமைத்து செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 26 தங்கம் வெள்ளி விலை
    வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் டிசிஎஸ்
    ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள் கூகுள்

    இந்தியா

    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1 வணிகம்
    தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் வணிகம்
    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025