
கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்காவதாக செக்யூரிட்டி கைது
செய்தி முன்னோட்டம்
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த நடவடிக்கையாக, கல்லூரியின் 55 வயதான பாதுகாவலரான பினாகி பானர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரவலான சீற்றத்தைத் தூண்டி, விரைவான நீதிக்கான கோரிக்கைகளை எழுப்பிய அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் நான்காவது கைது ஆகும். கொல்கத்தாவில் உள்ள கர்தா மற்றும் கஸ்பா காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் வசிக்கும் பினாகி பானர்ஜி, கல்லூரி வளாகத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் சந்தேகத்திற்குரிய பங்கிற்காக கஸ்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே வழக்கறிஞரும் முன்னாள் மாணவருமான மோனோஜித் மிஸ்ரா (31) மற்றும் தற்போதைய இரண்டு மாணவர்களான ஜைப் அகமது (19) மற்றும் பிரமித் முகோபாத்யாய் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணம்
திருமணத்திற்கு மறுத்ததால் குற்றம் நடந்ததா?
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, இது அவர்களுக்கு இடையேயான தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துகிறது. மோனோஜித் மிஸ்ராவின் திருமண முன்மொழிவை பாதிக்கப்பட்டவர் நிராகரித்ததால் குற்றம் நடந்ததாக போலீசார் நம்புகின்றனர். தற்போது தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்று காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 24 வயதான முதலாமாண்டு சட்ட மாணவியின் குற்றச்சாட்டுகளை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. விசாரணை முன்னேறி வரும் நிலையில், இந்த நான்காவது கைது, கல்லூரி வளாக பாதுகாப்பின் பங்கு குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுவதோடு, கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கடுமையான நடவடிக்கைக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.