NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி
    மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா தொற்று உறுதி

    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் உருமாறிய bfப்7 கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அப்படியிருந்தும், தேசிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் 25 சதவிகிதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பரிசோதனையை அதிகரிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் கர்நாடக மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக தகவல்

    மேற்கு வங்க மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கு பிஎப்7 வகை கொரோனா தொற்று உறுதி

    இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு பிஎப்7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுள் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேரும் கொல்கத்தாவிற்கு அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    இதனையடுத்து பிஎப்7 தொற்று உறுதி செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

    சீனாவில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் இந்த பிஎப்7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி லட்சக்கணக்கானோரை பாதிப்பதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    தொற்று

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025