முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதிவேற்கவிருந்த தருணத்தில், முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதவி விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
காங்கிரஸ் தலைவர் சஷி தரூரை எதிர்த்து திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர், 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது 18 ஆண்டுகால பொது சேவையில் இருந்து இன்று விலகுவதை பற்றி எக்ஸ்-இல் பதிவித்தார்.
அந்த பதிவில், ஒரு தலைவராக கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
எனினும் அந்த பதிவு பின்னர் நீக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில், 71 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
embed
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்
BJP leader Rajeev Chandrasekhar tweets, "Today curtains down on my 18-year stint of public service, of which 3 years I had the privilege to serve with PM Narendra Modi TeamModi2.0. I certainly didnt intend to end my 18 years of public service, as a candidate who lost an Election,... pic.twitter.com/OMQi2jxKtC— ANI (@ANI) June 9, 2024