Page Loader
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
இந்த ஆண்டு சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2023
03:57 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று(மார் 2) அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மூத்த ஆலோசகர் டாக்டர் அருப் பாசுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். வைரஸ் சுவாச தொற்றின் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் அவர் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லி

சோனியா காந்தி கண்காணிப்பில் இருக்கிறார்: மருத்துவமனை

சில நாட்களுக்கு முன், 76 வயதான சோனியா காந்தி, காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். இதனால், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பேசப்பட்டது. சோனியா காந்தி கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவ செக்-அப் நடந்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. டிரஸ்ட் சொசைட்டி, சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டிஎஸ் ராணா, "காய்ச்சல் காரணமாக" சோனியா காந்தி மார்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் அருப் பாசு மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.