Page Loader
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி 
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2023
10:55 am

செய்தி முன்னோட்டம்

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர்-18 அன்று அவர் சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கும் மேலாக இந்த தொந்தரவு நீடித்ததால், உடனடியாக மருத்துவரை அணுகியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரை பார்க்க குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும் செய்திகள் கூறுகின்றன முன்னதாக உடல்நலன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சி வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று