NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது

    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் இருந்து ஆண் காட்டுயானை ஒன்று வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவந்தது.

    மேலும் விவசாயநிலத்தில் காவலுக்கு இருந்த தமிழக விவசாயிகள் 2பேரையும் கொன்றது.

    'கருப்பன்' என பெயரிடப்பட்ட இந்த காட்டுயானைக்கு நான்கு முறை மயக்க ஊசி செலுத்தியும் அது அசரவில்லை.

    இந்நிலையில் கும்கி யானைகளை கொண்டு இதனை விரட்டும் பணியானது 3 கட்டங்களாக நடைபெற்றது.

    எனினும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    மீண்டும் கருப்பனின் அட்டகாசம் தொடர்ந்தது.

    வனத்துறையினர் மீண்டும் பொள்ளாச்சி டாப் சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளை தாளவாடிக்கு கொண்டுவந்தனர்.

    மறுபக்கம் கருப்பனின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ளார்கள்.

    யானை

    கும்கி யானைகள் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்ட 'கருப்பன்'

    இந்த கண்காணிப்பின் மூலம் தாளவாடியை அடுத்த மகாராஜன்புரம் என்னும் பகுதியிலிருந்து இரவில் வெளியேறும் கருப்பன் அதிகாலைவரை கரும்புத்தோட்டத்தில் இருந்துவிட்டு, அதன்பின்னர் வனப்பகுதிக்கு திரும்புவது தெரியவந்தது.

    இதனையடுத்து, நேற்று(ஏப்ரல்.,16)இரவு கரும்புத்தோட்டத்திற்கு வந்த கருப்பனுக்கு மருத்துவக்குழுவினர் மயக்க ஊசியினை செலுத்தினர்.

    அதன்பின்னர் யானையின் செயல்பாடுகள் கட்டுக்குள் வந்தது.

    அதன் கழுத்து மற்றும் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டு, சின்னத்தம்பி, மாரியப்பன் என்னும் 2 கும்கி யானைகளின் உதவியுடன் 2 மணிநேரம் போராடி கருப்பனை லாரியில் ஏற்றினார்கள்.

    கடந்த ஒரு ஆண்டாக தொந்தரவுக்கொடுத்து வந்த கருப்பன் யானை பிடிப்பட்டதையடுத்து அந்த சுற்றுவட்டாரமக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

    இந்நிலையில் பிடிபட்ட யானையினை வனப்பகுதியில் விடுவதா அல்லது யானைகள் முகாமிற்கு அனுப்புவதா?என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி கேரளா
    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு சட்டமன்றம்
    ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழக அரசு

    தமிழக விவசாயிகள்

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025