NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு

    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

    இங்குள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    இந்த சுற்றுலா தலங்களில் வாகனநிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடந்த சிலநாட்களாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறைக்காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து 15 குடும்பத்தினை சேர்ந்தோர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.

    இவர்கள் வந்த வேன், பைன்மரக்காடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து வந்த மற்றொரு வேன், இந்த வேன் மீது மோதியது.

    விபத்து 

    4 வேன்கள் அடுத்தடுத்து மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயம் 

    இந்த விபத்தில், தூத்துகுடியினை சேர்ந்த சுப்பையா(40) என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய வேன் மீது பின்னே வந்த 4 வேன்கள் அடுத்தடுத்து மோதியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தோர், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சரகர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    இதன்படி, வனத்துறையினரிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொடைக்கானல்
    சுற்றுலா
    தேனி
    வனத்துறை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கொடைக்கானல்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழ்நாடு
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  அரசு மருத்துவமனை
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  சுற்றுலா

    சுற்றுலா

    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! இந்தியா
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   ஆரோக்கியம்
    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  கடற்கரை
    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா? சுற்றுலாத்துறை

    தேனி

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை மாவட்ட செய்திகள்
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025