Page Loader
மும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை 

மும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை 

எழுதியவர் Sindhuja SM
Jul 08, 2024
12:56 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 27 விமானங்களை மும்பை விமான நிலையம் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பியது. மும்பை நகரின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான 6 மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பி நகரம் தத்தளித்ததால் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

மும்பை 

அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், வைல் பார்லே மற்றும் தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடைவிடாத மழையால் புயல் வடிகால்களில் மூழ்கி, இந்தியாவின் பரபரப்பான பல வணிக பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடிமை அமைப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறையை BMC அறிவித்துள்ளது. வகுப்புகளின் பிற்பகல் அமர்வு குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும். கனமழை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று அதிகாலை 2.22 முதல் 3.40 வரை 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அகமதாபாத், ஹைதராபாத், இந்தூர் போன்ற நகரங்களுக்கு அந்தத் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.