
சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
செய்தி முன்னோட்டம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென அதிகமாக மழை பெய்ததால், டீஸ்டாவின் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது.
சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமாகி, அந்த ஆற்றின் நீர்மட்டம் 15-20 அடி உயரம் வரை உயர்ந்தது.
இதனால், சிங்டம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகவ்க்ன்
உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு
இந்த திடீர் வெள்ளம் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள பல இராணுவ நிறுவனங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
டீஸ்டா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சிங்தாம் கால்வாய்ப் பாலம் வெள்ளத்தால் இடிந்து விழுந்தது.
மேற்கு வங்கத்தை சிக்கிமுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10ன் பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த திடீர் வெள்ளம் காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
சிக்கிம் மாநிலத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ள சிக்கிம் அரசு, டீஸ்டா நதியிலிருந்து விலகி இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.