NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

    எழுதியவர் Nivetha P
    Nov 27, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இக்கோயில் குளத்தினை 'சித்திரை குளம்' என்றும் அழைப்பர்.

    இந்த கோயிலின் அடையாளமாக விளங்கும் இக்குளத்தில் இன்று(நவ.,27)ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக இதுகுறித்து இந்து அறநிலையத்துறை, மீன்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகராட்சி பணியாளர்கள் 25 பேர் இன்று காலை 7 மணியில் இருந்து செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, மீன்களின் இந்த திடீர் இறப்பிற்கு காரணம் என்ன?" என்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    மீன்கள் 

    சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என கோரிய வெளிநாட்டு தம்பதி 

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மலேசியா தம்பதி கூறுகையில், 'சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியினை அளிக்கிறது' என்றும்,

    'ஆனால் இறந்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சுத்தம் செய்து கோயில் நிர்வாகம் கோயிலை நல்லமுறையில் நிர்வகித்தால் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவார்கள்' என்று கூறியுள்ளனர்.

    மேலும் அவர்கள், 'கோயில் குளத்தில் விளக்கு போடுவதால் விளக்கில் இருக்கும் எண்ணெய் குளத்தில் கரைந்து அதன் காரணமாக மீன்கள் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது' என்றும் தெரிவித்துள்ளனர்.

    'எனவே குளத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கக்கூடாது. பதிலாக விளக்கு போட வேறு இடம் ஏற்பாடு செய்யவேண்டும்' என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

    வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் இக்கோயிலினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி 

    சென்னை மயிலாப்பூர் கோவில் குளத்தில் விளக்கு ஏற்றியதே கொத்து கொத்தாக மீன்கள் இறக்க காரணம்..? துற்நாற்றம் வீசுவதாக மலேசிய தம்பதி வேதனை..#Chennai #Mylapore #KapaleeswararTemple #Fishes #Death #Polimer #PolimerNews pic.twitter.com/QtcXAicCJl

    — Polimer News (@polimernews) November 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    அறநிலையத்துறை
    மலேசியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    சென்னை

    சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல் காற்று மாசுபாடு
    தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது தீபாவளி
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்  விமான சேவைகள்
    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி கம்யூனிஸ்ட்

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  கடலூர்

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை இந்தியா
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்! பிவி சிந்து
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா தன்பால் ஈர்ப்பாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025