NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
    இந்தியா

    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

    எழுதியவர் Nivetha P
    February 20, 2023 | 02:22 pm 1 நிமிட வாசிப்பு
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

    கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோயில் யானைகள் திருவிழா போன்ற முக்கிய நாட்களில் உற்சவங்களில் சாமியின் வாகனமாக அமையப்பெறும். அதனுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கும். கேரளாவில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதனை கொண்டு பல திருவிழாக்கள் நடத்தப்படும். எனினும் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் பல இன்னல்களை சந்திப்பது மட்டுமல்லாமல், முறையான பராமரிப்பு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கோயில் யானைகள் பல வதைகளை அனுபவிப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் உள்பட பலர் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கேரளாவில் அறிவியல் பூர்வமாக தீர்வு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

    ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று பெயர் சூட்டிய நம்பூதிரி

    அதன்படி கேரளா திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை இனி சேவைசெய்யவுள்ளது என்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ யானையினை பெட்டா(PETA ) அமைப்பானது கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளது. பார்க்க நிஜ யானை போலவே காட்சியளிக்கும் இது பொத்தானை அழுத்தினால் தனது துதிக்கை வாயிலாக நீரை உமிழ்கிறது என்று கூறப்படுகிறது. 10அடி உயரமும் 800கிலோ எடையும் கொண்டுள்ள இந்த யானை மேல் 4 பேர் அமரலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த யானையை கோயில் சாமி ஊர்வலத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று கோயிலின் தலைமை நம்பூதிரி ராஜ்குமார் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    இந்தியா

    கேரளா

    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் வேங்கை வயல்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை தெற்கு ரயில்வே
    ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரிக்கு வந்த நபரை கொலை செய்த இளைஞர் கர்நாடகா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023