NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    இந்த கோயில் யானைகள் திருவிழா போன்ற முக்கிய நாட்களில் உற்சவங்களில் சாமியின் வாகனமாக அமையப்பெறும்.

    அதனுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கும்.

    கேரளாவில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதனை கொண்டு பல திருவிழாக்கள் நடத்தப்படும்.

    எனினும் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் பல இன்னல்களை சந்திப்பது மட்டுமல்லாமல், முறையான பராமரிப்பு வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

    கோயில் யானைகள் பல வதைகளை அனுபவிப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் உள்பட பலர் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள்.

    இத்தகைய சிக்கல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கேரளாவில் அறிவியல் பூர்வமாக தீர்வு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்டா(PETA) அமைப்பு தானம்

    ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று பெயர் சூட்டிய நம்பூதிரி

    அதன்படி கேரளா திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை இனி சேவைசெய்யவுள்ளது என்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ரோபோ யானையினை பெட்டா(PETA ) அமைப்பானது கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளது.

    பார்க்க நிஜ யானை போலவே காட்சியளிக்கும் இது பொத்தானை அழுத்தினால் தனது துதிக்கை வாயிலாக நீரை உமிழ்கிறது என்று கூறப்படுகிறது.

    10அடி உயரமும் 800கிலோ எடையும் கொண்டுள்ள இந்த யானை மேல் 4 பேர் அமரலாம் என்றும் கூறப்படுகிறது.

    எனவே இந்த யானையை கோயில் சாமி ஊர்வலத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த ரோபோ யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று கோயிலின் தலைமை நம்பூதிரி ராஜ்குமார் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    இந்தியா

    இந்தியாவில் ட்விட்டர் நிறுவனங்கள் மூடல்! காரணம் என்ன? ட்விட்டர்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி இங்கிலாந்து
    ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025