NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
    இந்தியா

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

    எழுதியவர் Sindhuja SM
    June 05, 2023 | 03:11 pm 1 நிமிட வாசிப்பு
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். "நேற்று இடிந்து விழுந்த அதே பாலம், கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் தான் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை அதிகாரிகள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பார்கள்,'' என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

    மாநில அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நீடித்து வருகிறது

    இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிதிஷ் குமார், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்ததால் மாநில அரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நடந்து வருகிறது. பாலத்தில் பழுது இருப்பதால் அது வேண்டுமென்றே இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக நேற்று பீகார் அரசு கூறியது. ஆனால், இன்று அம்மாநில முதல்வர் அது தானாகவே இடிந்து விழுந்தது என்று கூறியுள்ளார். 2022இல் இடியுடன் கூடிய மழையின் போது இதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பீகார்

    இந்தியா

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் கல்லூரி
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்
    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி கொரோனா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  ஒடிசா

    பீகார்

    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023