NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்
    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது.

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    "நேற்று இடிந்து விழுந்த அதே பாலம், கடந்த ஆண்டும் இடிந்து விழுந்தது. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது சரியாக கட்டப்படாததால் தான் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை அதிகாரிகள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பார்கள்,'' என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

    details

    மாநில அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நீடித்து வருகிறது

    இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிதிஷ் குமார், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    கடந்த 2014ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்ததால் மாநில அரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே வாக்கு வாதம் நடந்து வருகிறது.

    பாலத்தில் பழுது இருப்பதால் அது வேண்டுமென்றே இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக நேற்று பீகார் அரசு கூறியது.

    ஆனால், இன்று அம்மாநில முதல்வர் அது தானாகவே இடிந்து விழுந்தது என்று கூறியுள்ளார்.

    2022இல் இடியுடன் கூடிய மழையின் போது இதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இந்தியா

    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  உள்துறை
    சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு  காங்கிரஸ்
    தாய்லாந்து ஓபன் 2023 : இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி! பேட்மிண்டன் செய்திகள்
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? டிசிஎஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025