NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.

    இவர் ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

    20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் பெண்கள் உள்பட அப்பகுதியின் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

    வழக்கம் போல் இன்று(மே.,18) காலை தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

    அந்த ஆலையின் ஒரே அறையில் இருளாயி(48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள்.

    அப்போது அதிக வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியுள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த தீயானது அங்கிருந்த பட்டாசுகளில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்க துவங்கியது.

    வெடி 

    உடல் கருகிய நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி 

    மருந்துகள் உராய்வு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 2 அறைகள் வெடித்து தரைமட்டமானது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயினை அணைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து பட்டாசு விபத்தில் சிக்கிய 4 பேரும் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது.

    எனினும் மருத்துவமனையில் சேர்த்த சிறிதுநேரத்திலேயே குமரேசன்(30)மற்றும் சுந்தர்ராஜ்(27)உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

    இருளாயி(48) மற்றும் அய்யம்மாள்(54)ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    அரசு மருத்துவமனை
    விருதுநகர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காவல்துறை

    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  இந்தியா
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா

    காவல்துறை

    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025