NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023
    05:25 pm
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை. இவர் ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார். 20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் பெண்கள் உள்பட அப்பகுதியின் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். வழக்கம் போல் இன்று(மே.,18) காலை தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அந்த ஆலையின் ஒரே அறையில் இருளாயி(48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது அதிக வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த தீயானது அங்கிருந்த பட்டாசுகளில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்க துவங்கியது.

    2/2

    உடல் கருகிய நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி 

    மருந்துகள் உராய்வு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 2 அறைகள் வெடித்து தரைமட்டமானது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயினை அணைத்தனர். இதனைத்தொடர்ந்து பட்டாசு விபத்தில் சிக்கிய 4 பேரும் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. எனினும் மருத்துவமனையில் சேர்த்த சிறிதுநேரத்திலேயே குமரேசன்(30)மற்றும் சுந்தர்ராஜ்(27)உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இருளாயி(48) மற்றும் அய்யம்மாள்(54)ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    காவல்துறை
    காவல்துறை
    அரசு மருத்துவமனை
    விருதுநகர்

    காவல்துறை

    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்

    அரசு மருத்துவமனை

    உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி  பிறந்தநாள்
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  கொடைக்கானல்
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  தமிழ்நாடு

    விருதுநகர்

    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு
    சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி  கோவில்கள்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023