NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Apr 04, 2023
    07:35 pm
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது. ஆனால் காலஅவகாச நீட்டிப்பு குறித்து எந்தவித அறிவிப்பினையும் தேர்தல்ஆணையம் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் 68.75%வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதாவது மொத்தம் உள்ள 6.20கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் அரியலூரில் 99%, கள்ளக்குறிச்சியில் 93.91%, நாகப்பட்டினத்தில் 87.49% பேரும், சென்னையில் 32%, கோவையில் 48.34%, செங்கல்பட்டில் 53.50%பேரும் விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் ஆதார்-வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியினை தேர்தல்ஆணையம் இதுவரை துவங்கவில்லை. இதற்கான அறிவிப்பும் வரவில்லை. விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    2/2

    கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்கவில்லை

    இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 1, 2021முதல் மார்ச் 31, 2023வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த இணைப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. வாக்காளர்பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மத்திய சட்டத்துறை சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்தாண்டு மார்ச் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவியது. ஆனால் தேர்தல ஆணையம் அவ்வாறு எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேர்தல் ஆணையம்
    தமிழ்நாடு
    ஆதார் புதுப்பிப்பு

    தேர்தல் ஆணையம்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது புதுச்சேரி
    தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல் தமிழக அரசு
    சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா இந்தியா

    ஆதார் புதுப்பிப்பு

    சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்! சேமிப்பு திட்டங்கள்
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு மத்திய அரசு
    மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? பான் கார்டு
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023