NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Apr 04, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதியோடு முடிவடைந்தது.

    ஆனால் காலஅவகாச நீட்டிப்பு குறித்து எந்தவித அறிவிப்பினையும் தேர்தல்ஆணையம் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் 68.75%வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

    அதாவது மொத்தம் உள்ள 6.20கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

    இதில் அரியலூரில் 99%, கள்ளக்குறிச்சியில் 93.91%, நாகப்பட்டினத்தில் 87.49% பேரும், சென்னையில் 32%, கோவையில் 48.34%, செங்கல்பட்டில் 53.50%பேரும் விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் ஆதார்-வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியினை தேர்தல்ஆணையம் இதுவரை துவங்கவில்லை.

    இதற்கான அறிவிப்பும் வரவில்லை. விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    சத்யபிரதா சாஹு

    கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்கவில்லை

    இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 1, 2021முதல் மார்ச் 31, 2023வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே இந்த இணைப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    வாக்காளர்பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய சட்டத்துறை சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்தாண்டு மார்ச் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவியது.

    ஆனால் தேர்தல ஆணையம் அவ்வாறு எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்று தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் ஆணையம்
    தமிழ்நாடு
    ஆதார் புதுப்பிப்பு

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு

    தமிழ்நாடு

    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025