NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்

    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் 2022-23ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் உள்ள 7.5% உள் ஒதுக்கீட்டினை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா. சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கினார்.

    பின்னர் விழா மேடையில் பேசிய அவர், ஈரோட்டில் தேர்தல் நடைபெறவுள்ளதால் 10 மாணவர்களுக்கு அதன் பின்னர் கையடக்க கணினி வழங்கப்படும் என்று கூறினார்.

    தொடர்ந்து, அரசு பள்ளியில் பயின்று மருத்துவப்படிப்பினை மேற்கொள்வது சாதாரண விஷயம் இல்லை என்று பேசினார்.

    தானும் அரசு பள்ளியில் படித்துதான் இந்நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற பல மருத்துவர்கள் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

    மா.சுப்ரமணியம்

    நீட் தேர்வு விலக்கிற்காக போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்

    தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் விலக்கு பெற போராடிவரும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விஷயங்களை கேட்டுள்ளது.

    அதற்கான விளக்கம் இன்னும் இரண்டே தினங்களில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த டிசம்பர் 31ம்தேதியோடு இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியானது.

    முதல்வர் கூறியவாறு ஜனவரி 4ம்தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் 2மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

    இதற்கான ஒப்புதலும் ஆளுநரிடம் பெறப்பட்டது என்று கூறினார். இனி அந்த குழுவிற்கு ஆளுநர் தான் வழிகாட்டவேண்டும் என்றும்,

    தேடுதல் குழு தேர்வுசெய்யும் மூவருள் ஒருவரை ஆளுநர் தான் தேர்ந்தெடுப்பார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    சென்னை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023

    சென்னை

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு கோவை
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் உலக செய்திகள்
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025