NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 
    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும்.

    ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 09, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது.

    இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது அவசரமான விவகாரம் இல்லை என்று தெரிவித்தது.

    மேலும், கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரிப்பார் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து பேசிய மனுதாரரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய், இந்த முக்கியமான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கொள்ளாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

    details

    கோடை விடுமுறையின் போது இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: நீதிமன்றம்

    "இது நீதிமன்றம், பொது மேடை அல்ல, இந்த விவகாரம் எங்காவது முடிவுக்கு வர வேண்டும்" என்று இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும்.

    2,000 ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து உபாத்யாய் தாக்கல் செய்த அவசர மனு கடந்த ஜூன் 1ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது.

    மேலும், கோடை விடுமுறையின் போது இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    2,000 ரூபாய் நோட்டுகளை குற்றவாளிகளும் பயங்கரவாதிகளும் எந்தவித அடையாளச் சான்றும் இல்லாமல் மாற்றுவதாக இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் இந்தியா
    ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி  இந்தியா
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  இந்தியா

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் பீகார்
    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது சிபிஐ
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு! ஒலிம்பிக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025