NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள் 
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் சோழர் கால தொல்பொருட்கள்

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள் 

    எழுதியவர் Nivetha P
    Jun 21, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில் சென்னை மண்டல அகழாய்வு சார்பில் மத்திய தொல்லியல் துறை 2ம் கட்ட அகழாய்வினை தற்போது நடத்தி வருகிறது.

    இதில் 4 அகழ்வாய்வு குழிகள் தோண்டுவதற்கான பணிகள் சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளரான காளிமுத்து தலைமையில் நடைபெற்று வந்தது.

    அதன்படி, 18-43 செ.மீ., வரை வெவ்வேறு அளவிலான ஆழத்தில் கடந்த 1 மாதமாக தோண்டப்பட்டுள்ள இந்த குழிகளில் 400க்கும் மேலான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் சுடுமண்ணாலான வட்டசில்லுகள், பானை வடிவத்தினை செப்பனிடும் கருவிகள், முத்திரைகள், கருப்பு-சிவப்பு மற்றும் வண்ண கோடுகள் கொண்ட பானை ஓடுகள் ஆகியன கிடைத்துள்ளது.

    அகழாய்வு 

    சோழர்களின் கலை நயமானது செம்பு பொருட்கள் மூலம் தெரிகிறது 

    மேலும், விலைமதிக்கத்தக்க சோப் ஸ்டோன் வகையிலான கல் மணிகள், அகேட், விலை உயர்ந்த கார்னேலியன், அமேதிஸ்ட காதணிகள், பதக்கங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, செம்பால் செய்யப்பட்ட மூடியுடன் கூடிய குங்கும சிமிழ் கிண்ணம், மூடியில்லா கிண்ணங்கள், ஆணி வடிவில் உள்ள தண்டு பகுதிகள், தங்க ஆபரணத்தின் சிறு தகடுகள் கிடைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அகழாய்வு குழிகளின் மேம்பகுதியில் ராஜ ராஜ சோழனின் நாணயம், சோழர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளது.

    சோழர்களின் கலை நயமானது செம்பு பொருட்கள் வடிவமைக்கப்பட்ட விதத்தில் தெரிகிறது என்னும் கருத்து தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காஞ்சிபுரம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!  கோவில்கள்
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ஒடிசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025