NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன் 
    நீதிமன்றம், ஜூலை 17ஆம் தேதி வரை ராஜேஷ் தாஸின் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2023
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று காலை 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மத்திய தமிழக மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    அந்த சமயத்தில், டிஜிபி ராஜேஷ் தாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார்.

    மேலும், அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்கவிடாமல் தடுத்தற்காக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    ஸ் சி

    ஜூலை 17ஆம் தேதி வரை ராஜேஷ் தாஸின் தண்டனைக்கு இடைக்கால தடை 

    இதனையடுத்து, தமிழக காவல்துறை சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து டிஜிபி ராஜேஷ் தாஸ் நீக்கப்பட்டார்.

    அதன் பிறகு, இந்த வழக்கில் மொத்தம் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று காலை தீர்ப்பளித்த விழுப்புரம் அமர்வு நீதிபதி புஷ்பராணி, டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜூலை 17ஆம் தேதி வரை ராஜேஷ் தாஸின் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழகம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்  தமிழக அரசு
    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை திருவிழா
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு
    அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை  தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி

    காவல்துறை

    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்

    காவல்துறை

     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025