NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்
    சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்

    சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை நகரம் உருவாகி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22 அன்று 'மெட்ராஸ் டே' அனுசரிக்கப்படுகிறது.

    விஜயநகர அரசின் கீழ் இருந்த இந்த நகரம், கிழக்கிந்திய கம்பெனியின் முன்னெடுப்பால், துறைமுக நகரமாகவும், சென்னை பட்டினமாகவும் உருவானது.

    ஜார்ஜ் கோட்டையிலிருந்து தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், இந்த நகரில் உள்ள முக்கிய இடங்களின் பெயர்களை, அவர்களுக்கு புரியும்படியும், எளிதாக உச்சரிக்கவும் மாற்றி அமைத்தனர்.

    card 2

    சென்னை உருவான விதம்

    விஜய நகர மன்னர்களும், அதன் பின்னர் ஆற்காட் நவாப்களும் ஆண்ட இந்த நகரத்தை, தங்களின் துறைமுக போக்குவரத்துக்காக தேர்வு செய்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.

    அப்போதைய விஜயநகர சாம்ராஜ்யத்தின் படைத்தளபதியும், குறு மன்னனுமாகிய தாமர்லா முடிராச சென்னப்ப நாயக்குடு என்பவரிடம் இருந்து, 1639 ஆம் ஆண்டு, இந்த நிலத்தை பெற்றது கிழக்கிந்திய கம்பெனி. அதன் நினைவாக 'சென்னை பட்டினம்' என குறிக்கப்பட்டது.

    அப்போது போடப்பட்ட விற்பனை ஒப்பந்தத்தில் தான் முதல்முதலாக 'சென்னை' என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    card 3 

    சென்னையின் முக்கிய இடங்களின் பெயர்கள்

    சிந்தாதரி பேட்டை: சின்ன தறி பேட்டை தான் தற்போது மருவி சிந்தாதரிபேட்டை என மாறியுள்ளது. இந்த இடத்தில் தறி நெசவாளர்கள் அதிகம் பேர் குடி கொண்டிருந்ததாகவும், குடிசை தொழில் போல, இங்கே தறிகள் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை: பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கே குடிபெயர்ந்ததும், அவர்கள் கண்டுபிடித்த இடம் தான் இந்த வண்ணாரப்பேட்டை. அவர்களின் துணிகளை துவைக்கவும், உலர்த்தவும், இங்கே கூவம் ஓடும் கூவம் ஆற்றங்கரையில், சலவைக்காரர்களை குடியமர்த்தினர். அதன் காரணமாகவே இந்த பெயர்.

    card 4

    மந்தைவெளி, ராயபுரம்

    மந்தைவெளி: அடையாறு ஆற்றங்கரையில் பலர் தங்களது கால்நடைகளை மேய்ப்பது வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக, பசுமையான புற்கள் நிறைந்த இந்த இடத்தில், மந்தையாக ஆடுகளும், மாடுகளும் மேய்ச்சலுக்கு வருவதால், இந்த இடத்தை 'மந்தைவெளி' என குறிப்பிடத்துவங்கினர்.

    ராயபுரம்: அப்போதிருந்த 'ராயர்' அதாவது அரசர் நினைவாக இந்த 'ராயர்'புறம் மருவி 'ராயபுரம்' என மாறியது.

    மின்ட் ஸ்ட்ரீட்: 'மின்ட்' என்றால் ஆங்கிலத்தில் உலோகங்களை உருக்குவது என பொருள். 1841-1842 காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம், இங்கே காசுகள் அச்சடிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினர்.

    card 5

    நந்தனம், பாரிஸ் கார்னர், கொத்தவால்சாவடி 

    கொத்தவால்சாவடி: பிரிட்டிஷ் அரசாங்கம், வரி வசூலிப்பவர்களை குறிப்பிடும் பெயர் கொத்தவால். சென்னையில் இந்த இடத்தில் தான், வரி வசூலிக்கும் அதிகாரிகளின் அலுவலகங்களும் இருப்பிடமும் இருந்தது

    நந்தனம்: சுதந்திரத்திற்கு பிறகு, வீடு வசதித்துறை இங்கே வீடுகளை கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு தந்தது. அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால், மூதறிஞர் ராஜாஜி, இந்த பெயரை சூட்டினார்.

    பாரிஸ் கார்னர் : தாமஸ் பாரிஸ் என்பவர் இந்த இடத்தில் வியாபாரத்தை துவங்கியதால், அவர் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெட்ராஸ் டே

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    சென்னை

    செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு கம்யூனிஸ்ட்
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  திருச்சி
    திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் திருவண்ணாமலை
    மணிப்பூர் விவகாரம் - சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்  மணிப்பூர்

    மெட்ராஸ் டே

    மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025