NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்? 
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்? 

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 08, 2025
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

    முறையான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதற்காக இந்த செயல்முறை 17 சுற்றுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில் திமுகவின் வி.சி.சந்திர குமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

    அதிமுக, பாஜக உள்ளிட்ட இதர முக்கிய கட்சிகள் எதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

    அதெல்லாம் 46 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியில் களமிறங்கினர். மொத்தம் 2,27,546 வாக்காளர்களில் 1,54,657 பேர் வாக்களித்ததில் 67.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    வாக்கு எண்ணிக்கை

    சித்தோடு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

    தேர்தலை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் சுமூகமான முறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தபால் வாக்குகளுடன் எண்ணும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து 14 நியமிக்கப்பட்ட மேஜைகளில் 17 சுற்றுகள் மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    2026 ஏப்ரல்/மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் திமுக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்
    வாக்கு எண்ணிக்கை
    ஈரோடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    வாக்கு எண்ணிக்கை

    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை அருணாச்சல பிரதேசம்
    தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி மக்களவை
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்
    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  மாவட்ட செய்திகள்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது தமிழ்நாடு
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்  வணிகம்

    மாவட்ட செய்திகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025