Page Loader
ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம் 
ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்

ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம் 

எழுதியவர் Nivetha P
May 12, 2023
05:41 pm

செய்தி முன்னோட்டம்

ஈரோடு, மணல்மேடு பகுதி குமாரசாமி 2வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகள் சந்தியா(19), தனியார் கல்லூரியில் பி.காம்.2ம்ஆண்டு படித்துவருகிறார். இவரை லவ்ஜிகாத் என்னும் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த அலாவுதீன்(21). இவர்கள் சிலதினங்களுக்கு முன்னர் சந்தியாவின் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனைக்கண்ட சந்தியாவின் தாயார் பூங்கோடி மகளை கண்டித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிலமணி நேரத்திலேயே சந்தியா வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். வீட்டின் பீரோவில் பார்த்தபொழுது அவரது கல்விச்சான்றிதழ்கள் எதுவுமில்லை. இதனால் தாய் பூங்கோடி தனது குடும்பத்தோடு ஈரோடு காவல்துறை எஸ்.பி.சசிமோகனிடம் புகார் அளித்துள்ளார். அதில் காதல் என்னும் பெயரில் தனது மகளை அலாவுதீன் கடத்திச்சென்றுள்ளார். அலாவுதீன் ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற வழக்குகளில் கைதானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

லவ்ஜிகாத் 

தி கேரளா ஸ்டோரி என்னும் படம் வெளிச்சத்திற்கு வந்த லவ்ஜிகாத் 

மேலும், அலாவுதீன் தனது மகளை அவர் வெளிநாடுக்கு விற்றுவிடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என்று பயமாகவுள்ளது. ஆகவே எனது மகளை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி என்னும் படம் வெளியானது. இதில் இந்து பெண்கள் எப்படியெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எப்படி அடிமையாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். அங்கு அப்பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதை குறித்தும் மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற லவ்ஜிகாத்தால் ஹிந்து பெண்கள் பலிகடா ஆகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.