NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்
    இந்தியா

    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்

    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்
    எழுதியவர் Nivetha P
    Mar 03, 2023, 03:23 pm 0 நிமிட வாசிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்
    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மார்ச்.,2) நடந்து முடிந்தது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சியினர்களின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில், 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தவிர மற்ற 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மேலும் அதில் 13 பேர் பத்து வாக்குகளை கூட பெறாமல் ஒற்றை இலக்கத்திலேயே வாக்குகளை பெற்றுள்ளனர். யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவு செய்யும் வகையில் நோட்டாவிற்கு 798 வாக்குகள் பதிவாகியிருந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவகுமார் வழங்கினார்

    மேலும் சுயேச்சை வேட்பாளர்களான ஆர்.குமார், எம் பிரபாகரன் ஆகியோர் தலா 3 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. நேற்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் 15வது சுற்றில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று முதலிடத்தினை அடைந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து அதிமுக வேட்பாளாரான கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்றுள்ளார். 3ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, தேமுதிக ஆனந்த் 1,432 ஓட்டுகள் பெற்றிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து, இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவகுமார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தேர்தல் முடிவு
    ஈரோடு

    தேர்தல் முடிவு

    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா

    ஈரோடு

    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  காவல்துறை
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்  வணிகம்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது தமிழ்நாடு
    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023