Page Loader
ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்
ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்

ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
Feb 11, 2023
02:04 pm

செய்தி முன்னோட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடக்க அதிக வாய்ப்புள்ளதாக பொது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து இது குறித்து தகவல் அளிக்க 24 மணிநேர கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டது குறிப்பிடவேண்டியது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இரவு நேரங்களில் டோக்கன் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, திருப்பூர் மாவட்டம் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சார்புதீன் காரில் சோதனையிடப்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் டோக்கன்களை பறிமுதல் செய்துள்ளார்கள். அங்கு, ஈரோடு டி.சி.கிருஷ்ணனுன்னி அவர்களும் உடன் இருந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஈரோடு இடைத்தேர்தல்-பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்