NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    08:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.31.,) துவங்கியுள்ளது.

    இதனை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் தளத்தில், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கவுள்ளது.

    பல்வேறு கட்சியினர் முகாம்

    இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் மற்றும் காவல் பார்வையாளர் நியமனம்

    இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக பல்வேறு கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிகம் குவிகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியில் முகாமிட்டு உள்ளார்கள்.

    இதனையடுத்து தற்போது இந்த இடைதேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அவரை தொடர்ந்து, காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தேர்தல்

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025