NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.

    எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஈ.பி.எஸ். தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், கடந்த 11.7.2022ல்நடைபெற்ற பொதுக்குழுவின் அடைப்படையில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

    இதற்கு பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

    இதற்கு ஓ.பி.எஸ். தரப்பில் அதிமுக'வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று பதில் மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு

    இரட்டை இலை சின்னம் விவகாரம்-பதில் மனு அளித்த தேர்தல் ஆணையம்

    இதே போல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில், 11.7.2022ல் நடந்த பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதனையும் தேர்தல்ஆணையம் ஏற்கவில்லை என்று பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மேலும், அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

    ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அதுகுறித்த முடிவினை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(பிப்.,3) நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரியான சிவகுமாரிடம் இதுகுறித்து கேட்கையில், இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது.

    அதுவந்த பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    எடப்பாடி கே பழனிசாமி
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025