NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர், பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தீவிர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அதிமுக'வினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, குக்கர், தலா ரூ.1000போன்ற பரிசுப்பொருட்களை வழங்கிவருவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்தனர்.

    அவர்கள் அளித்த புகாரின்பேரில் பறக்கும்படையினர் குறிப்பிட்ட பகுதியான சிந்தா நகர், மாதவகாடு போன்ற இடங்களில் நேற்று(பிப்.,20)மாலை சோதனை மேற்கொண்டுள்ளார்கள்.

    ஆனால் குக்கர், கொலுசு, பணம் என எவ்வித பொருளும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    எனினும், புகார்கள் எழுந்த மற்ற பகுதிகளில் சோதனையினை பறக்கும்படையினர் மேற்கொண்டனர்.

    இதில் ஓர் குடோனில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அங்கு சென்றும் தேடினர்.

    ஆனால் அங்கு என்ன பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

    பரபரப்பினை ஏற்படுத்திய சம்பவம்

    வேனில் வந்திறங்கிய நபர் அப்பகுதி வாக்காளர்களுக்கு குக்கர்கள் விநியோகம்

    இந்நிலையில் முன்னதாக நேற்று காலை தேர்தலுக்குட்பட்ட இடம் ஒன்றில் வேனில் ஒருவர் வேட்டி சட்டை அணிந்து கொண்டு வந்து இறங்கி, அப்பகுதியில் உள்ள 5குடும்பங்களுக்கு பரிசாக குக்கர்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்த நபர் டோக்கன்களை மற்றவர்களுக்கு விநியோகம்செய்து அருகிலுள்ள குடோனிற்கு சென்று குக்கர்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது.

    இதுபற்றி தெரிந்தவுடன் மற்றகட்சியினர் அங்குத்திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் அப்பகுதி மக்கள் கையில் புதிய குக்கர்கள் வைத்திருக்கும் வீடியோயொன்றும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி பெரும்பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வேட்டி, பட்டு புடவை மற்றும் 500ரூ.பணம் ஆகியனவற்றை அளித்துசென்றார் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025