NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்
    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்காக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்ற இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று(பிப்.,7) ஓபிஎஸ் தரப்பு செய்தியாளர்களை சந்தித்து தங்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

    இதனால், இன்று அதிமுக வேட்பாளாராக தென்னரசு வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

    ஆதரவு அறிக்கை வெளியீடு

    அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக பாடுபட வேண்டும்-தொண்டர்களுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பா.ஜ.க. தனது முழு ஆதரவினை அளிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் மற்றும் கூட்டணி நன்மை கருதி தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.க்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் திமுக அரசை வீழ்த்த ஒன்று கூடியிருக்கும் நாம் அனைவரும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும், பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தேர்தல்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025