NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
    இந்தியா

    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை

    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023, 08:12 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு உள்பட பல கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் இதில் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பங்குபெறும் கட்சியினர் கணக்கு பார்க்காமல் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக தனியாக களமிறங்கி, ஒத்தை ஆளாய் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார் தீபன் சக்கரவர்த்தி என்னும் 32 இளைஞர். இவர் மைக் சின்னத்தில் இந்த இடைதேர்தலில் போட்டியிடுகிறார். அவரிடம் பேசுகையில், நிருபராக பணிபுரிந்துள்ள நிலையில் 2021ம் ஆண்டு நாமக்கல் தொகுதியில் பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதாக கூறுகிறார்.

    தேர்தல் நடைமுறைகளை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்

    ஆனால் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு உழைக்கவேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும், தேர்தல் செலவினங்கள், வாக்குப்பதிவு முறைகள், பிரச்சாரக்கட்டுப்பாடுகள் போன்ற தேர்தல் நடைமுறைகளை குறித்து அறிந்துகொள்ளவே அதில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து தனது இணைய சேனலில் பதிவுசெய்ய திட்டமிட்டதாகவும் கூறினார். தேர்தல் செலவீனமாக தேர்தல் ஆணையம் 40லட்சத்தை உச்சவரம்பாக வைத்துள்ளது. ஆனால் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் மேற்கொண்டால் இந்த தொகையே அதிகம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தேர்தல் செலவினங்கள் குறித்து 4 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தில் தகவலளிப்பது ஓர் விதியாகும். அதன்படி, நேற்று தனது செலவுகணக்கினை பில்லுடன் தீபன் தாக்கல் செய்துள்ளார். அதில் மைக் சின்ன ஸ்டிக்கர் அடிக்க 315ரூபாய் செலவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    தேர்தல்
    ஈரோடு

    தமிழ்நாடு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை

    தேர்தல்

    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா

    ஈரோடு

    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  காவல்துறை
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்  வணிகம்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது தமிழ்நாடு
    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023