NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்பது மக்கள் நினைக்குமாறு பிளாஸ்டிக் அரிசி அல்ல, இதில் போலிக்அமிலம், இரும்புச்சத்து விட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த அரிசியானது முதல்கட்டமாக அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு நாடுமுழுவதும் 112 மாவட்டங்களை தேர்வுசெய்து இந்த அரிசியினை தற்போது உணவு திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இந்த அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனைதொடர்ந்து ரேஷன்கடைகளில் இந்த அரிசியினை விநியோகிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

    2024க்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த அரிசியினை வழங்கவேண்டும் என்பது மத்தியஅரசின் இலக்கு.

    தடை விதிக்க கோரிக்கை

    ரசாயனம் கலந்த அரிசி என அச்சத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

    அதன்படி, சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்ச அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக தமிழக நுகர்பொருள் வாணிய கழகத்தின் சென்னை மேலாளர் எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்த அரிசி கடந்தமாதம் முதல் எவ்வித முன்னறிவிப்பின்றி ரேஷன்கடைகளில் வழங்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    மேலும், இந்த அரிசி இயற்கைக்கு மாறாக எறும்பு கூட தின்ன முடியாத அளவிற்கு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது.

    இதனை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்துநேரிடும் என்று மக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த அரிசி ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்ப்பாட்டம்
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    ஆர்ப்பாட்டம்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023

    தமிழ்நாடு

    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தஞ்சை பெரிய கோவில்
    வைரல் வீடியோ: ஓடும் ரயிலில் வட இந்தியர்களை தாக்கும் தமிழர் இந்தியா
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 வானிலை அறிக்கை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025