NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
    இந்தியா

    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

    எழுதியவர் Nivetha P
    February 22, 2023 | 12:06 pm 0 நிமிட வாசிப்பு
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

    இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்பது மக்கள் நினைக்குமாறு பிளாஸ்டிக் அரிசி அல்ல, இதில் போலிக்அமிலம், இரும்புச்சத்து விட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அரிசியானது முதல்கட்டமாக அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு நாடுமுழுவதும் 112 மாவட்டங்களை தேர்வுசெய்து இந்த அரிசியினை தற்போது உணவு திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இந்த அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து ரேஷன்கடைகளில் இந்த அரிசியினை விநியோகிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. 2024க்குள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த அரிசியினை வழங்கவேண்டும் என்பது மத்தியஅரசின் இலக்கு.

    ரசாயனம் கலந்த அரிசி என அச்சத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

    அதன்படி, சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்ச அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக தமிழக நுகர்பொருள் வாணிய கழகத்தின் சென்னை மேலாளர் எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார். இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்த அரிசி கடந்தமாதம் முதல் எவ்வித முன்னறிவிப்பின்றி ரேஷன்கடைகளில் வழங்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த அரிசி இயற்கைக்கு மாறாக எறும்பு கூட தின்ன முடியாத அளவிற்கு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்துநேரிடும் என்று மக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அரிசி ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆர்ப்பாட்டம்
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    ஆர்ப்பாட்டம்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்
    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் விசிக
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு

    மத்திய அரசு

    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும் இந்தியா
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மாநில அரசு
    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி

    தமிழ்நாடு

    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை சென்னை
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழக அரசு
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி மதுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது திருவண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023