NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    May 20, 2023
    07:40 pm
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு
    பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

    இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து ஏ.ஐ.சி.டி.இ. அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாணவர் சேர்க்கை அனுமதியினையும் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரமும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    2/2

    ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ள சுற்றறிக்கை 

    இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், மாணவர் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 11ம் தேதி ஆகும். மேலும் மாணவர் சேர்க்கையின் இறுதிக்கட்ட காலியிடங்களை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். அதன்படி இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்புகள் செப்டம்பர் 15ம் தேதியே துவங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையினை முடிக்க இந்த கால அட்டவணையினையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கல்லூரி மாணவர்கள்
    இந்தியா

    கல்லூரி மாணவர்கள்

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  பள்ளி மாணவர்கள்
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!  பள்ளி மாணவர்கள்
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு

    இந்தியா

    UPI சேவையில் இணையும் ஜப்பான்? ஜப்பான்
    உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்! ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா? எலக்ட்ரிக் கார்
    தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி! திரையரங்குகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023