NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை 
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை

    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை 

    எழுதியவர் Nivetha P
    Jun 26, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    அதன்படி இன்று(ஜூன்.,26) தேரோட்டம் நடந்து முடிந்துள்ளது.

    இதனிடையே, ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று அக்கோயில் தீட்சிதர்கள் பதாகை ஒன்றினை வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின்படி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா, வாட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் நேற்று(ஜூன்.,25)நேரடியாக சென்று குறிப்பிட்ட அந்த சர்ச்சையினை கிளப்பும் பதாகையினை அகற்ற முயற்சி செய்தனர்.

    அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ததோடு, பதாகையினை எடுக்க எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.

    அனுமதி மறுப்பு 

    பதாகையினை எடுக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை 

    இதன் காரணமாக காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர் என்று தெரிகிறது.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து அக்கோயிலின் தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர், கோயிலின் இணை ஆணையாளர் உத்தரவுப்படியே இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து, "கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தேரில் வைத்து வெளியே கொண்டு வருகையில், பாதுகாப்பு கருதி கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது"என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து பக்தர்கள் தொடர்ந்து பதாகையினை எடுக்க கோரிக்கை வைத்துவந்த நிலையில், கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த பதாகையினை அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்போடு சென்று அகற்றியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறநிலையத்துறை
    கடலூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    காவல்துறை

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025