NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு

    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 17, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தினையடுத்த ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியிலுள்ள கிராமத்தில் இருந்து வந்தவர் ரவுடி விஷ்வா.

    குள்ள விஷ்வா என்றழைக்கப்படும் விஸ்வநாதன் மீது கொலை வழக்கு, கொள்ளை வழக்கு என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    அதன்படி, சில குற்ற வழக்குகளுக்காக அவர் ஸ்ரீபெரம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார்.

    இடையில் அவர் கையெழுத்திட வராமல் தலைமறைவானதால் அவரை பிடிவாரண்ட் கொண்டு பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று(செப்.,16) அவரை காவல்துறையினர் கைது செய்து சோகண்டி பகுதியருகே அழைத்து வருகையில், விஷ்வா காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    அதனால் தற்காப்பிற்காக அவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடிதம் 

    இறப்பதற்கு முன்னரே கடிதம் எழுதி வைத்த ரவுடி 

    இதில் ரவுடி விஷ்வா மரணடைந்த நிலையில், அவரது உடலை காவல்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது ரவுடி விஷ்வா தான் என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு முன்னரே ஓர் கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.

    அதில் அவர், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் தான் கையெழுத்திட சென்றபொழுது அவரிடம் கையெழுத்தினை வாங்காமல், சுட்டு விடலாமா? என்று எஸ்ஐ தயாளன், ஆய்வாளர் பரந்தாமனிடம் கேட்டார் என்று எழுதியுள்ளார்.

    மேலும், "இதனால் அச்சமடைந்ததால் தலைமறைவானேன். ஒருவேளை எனக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இக்கடிதம் வெளியாகியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    சென்னை உயர் நீதிமன்றம்
    காஞ்சிபுரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    காவல்துறை

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி  மகாராஷ்டிரா
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்

    காவல்துறை

    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்  கர்நாடகா
    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் ஹரியானா

    சென்னை உயர் நீதிமன்றம்

    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! கோலிவுட்
    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம் கொரோனா
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  சென்னை

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!  கோவில் திருவிழாக்கள்
    ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம் ஒடிசா
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  தொல்லியல் துறை
    சென்னையில்  திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து  கல்லூரி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025