NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
    இந்தியா

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?

    எழுதியவர் Sindhuja SM
    September 18, 2023 | 04:42 pm 1 நிமிட வாசிப்பு
    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
    எதிர்க்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எட்டு மசோதாக்களில் இந்த மசோதா குறிப்பிடப்படவில்லை

    நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இருந்து உயர்மட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாவை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எட்டு மசோதாக்களில் இந்த மசோதா குறிப்பிடப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பதவியை நிர்வகிக்கும் இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர்(CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை(ECs) நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை(CJI) விலக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறான தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 

    மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான தேர்தல் ஆணையர் பதவியை கேபினட் செயலருக்கு இணையான பதவியாக மாற்றவும் இந்த மசோதா முயல்கிறது. CEC மற்றும் ECக்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது நினைவுகூரத்தக்கது. எனினும், இது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும் வரை மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு 

    ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா-2023 நிறைவேற்றப்பட்டால் தேர்வுக் குழு ஒருதலைப்பட்சமாக மாறக்கூடும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் SY குரைஷி கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கவலையை எழுப்பி இருந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் மார்ச் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். "நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது," என்று அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு அமெரிக்கா

    நாடாளுமன்றம்

    முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி  இந்தியா
    சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி  இந்தியா
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு  மத்திய அரசு
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எடப்பாடி கே பழனிசாமி

    தேர்தல் ஆணையம்

    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  இந்தியா
    'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன? தேர்தல்
    2019இல் தோனி, 2024இல் டெண்டுல்கர்; இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேசிய அடையாளம் சச்சின் டெண்டுல்கர்
    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வாக்காளர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023