NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?
    எதிர்க்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எட்டு மசோதாக்களில் இந்த மசோதா குறிப்பிடப்படவில்லை

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 18, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இருந்து உயர்மட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாவை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட எட்டு மசோதாக்களில் இந்த மசோதா குறிப்பிடப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

    தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பதவியை நிர்வகிக்கும் இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது.

    தலைமைத் தேர்தல் ஆணையர்(CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை(ECs) நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை(CJI) விலக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது.

    பிக் 

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறான தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 

    மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான தேர்தல் ஆணையர் பதவியை கேபினட் செயலருக்கு இணையான பதவியாக மாற்றவும் இந்த மசோதா முயல்கிறது.

    CEC மற்றும் ECக்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

    எனினும், இது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும் வரை மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறி இருந்தது.

    ஏஜன்வ்

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு 

    ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா-2023 நிறைவேற்றப்பட்டால் தேர்வுக் குழு ஒருதலைப்பட்சமாக மாறக்கூடும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் SY குரைஷி கூறியிருந்தார்.

    எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கவலையை எழுப்பி இருந்தனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் மார்ச் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

    "நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது தெளிவாகிறது," என்று அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நாடாளுமன்றம்

    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை
    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் திமுக

    உச்ச நீதிமன்றம்

    மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்  மணிப்பூர்
    ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு  ராகுல் காந்தி
    ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம்  தொல்லியல் துறை

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025