NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
    இல்லம் தேடி கல்வி வகுப்புகளைப் பார்வையிடும் முதலமைச்சர் (படம்: இந்து தமிழ்)

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022
    11:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    86 ஆயிரம் தொடக்க பள்ளி மாணவர்களின் கல்வி திறன் பற்றி நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்(என்சிஇஆர்டி) ஒரு ஆய்வு நடத்தியது.

    இந்த ஆய்வில், தமிழகத்தில் படிக்கும் 3ஆம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவர்கள் தமிழ் மற்றும் கணித பாடங்களில் பின்தங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

    முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின் தங்கி இருக்கிறது.

    ஆய்வு

    இந்த ஆய்வின் தகவல்கள்:

    20% மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    23% மாணவர்களுக்கு மட்டுமே அடிப்படைக் கணக்குத் தெரிகிறது.

    52% மாணவர்களால் காலண்டரில் தேதி, மாதத்தைக் கூட சரியாக சொல்ல முடியவில்லை.

    ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் படிக்கும் 40-45% மாணவர்கள் தாய்மொழியையும் கணக்கையும் நன்கு படிக்கின்றனர்.

    கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்கள் பள்ளிகள் சரியாக செயல்படவில்லை.

    இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்ய எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

    இல்லம் தேடி கல்வி திட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. இருப்பினும், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன் பின்தங்கியே இருப்பதால் இது போன்ற திட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025