டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு ED அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்ததை அடுத்து, கட்சித் தலைவர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் மற்றும் ஜாஸ்மின் ஷா ஆகியோர் இந்த தகவலை கூறியுள்ளனர். "நாளை காலை @அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் ED சோதனை நடத்தப் போகிறது என்று செய்திகள் வருகின்றன. கைது செய்ய வாய்ப்புள்ளது" என்று அதிஷி புதன்கிழமை இரவு ட்வீட் செய்துள்ளார்.
அதிஷியின் ட்வீட்
AAP அலுவலகத்தில் கூடிய தலைவர்கள்
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது மற்றும் அவரது வீட்டில் ED சோதனை என்ற தகவல் பரவியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கட்சித் தலைமையகத்தில் கூடத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கெஜ்ரிவாலுக்கு ED புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. அவர் சம்மனைத் தவிர்த்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறி விசாரணை நிறுவனத்துக்குப் பதில் அனுப்பினார். இருப்பினும், இந்த அமலாக்கத்துறை சம்மனை "சட்டவிரோதமானது" என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார். டெல்லி முதலமைச்சரை கைது செய்ய ED உத்தேசித்துள்ளதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து அவரைத் தடுக்க விரும்புவதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.