NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
    ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் முடக்கம்(படம்: News 18 Tamilnadu)

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    09:29 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    2003-2007ஆம் ஆண்டுகளில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் லஞ்ச புகார் வழக்கை விசாரித்த போது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கோவையில் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த நிறுவனத்தினிடம் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது.

    ஆ.ராசாவின் மீது சுமத்த பட்டிருந்த லஞ்ச புகாரை விசாரிக்கும் போது இந்த 45 ஏக்கர் நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    23 Dec 2022

    அமலாக்கத்துறைக் கொடுத்த தகவல்கள்

    ஆ.ராசா, மத்திய அமைச்சராகப் பதவி வகித்த போது இவர் லஞ்சம் வாங்கியதாகப் புகார்கள் எழுந்தன.

    இதை விசாரித்த அமலாக்கதுறை, "ஆ.ராசா குருகிராமில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருக்கிறார். இதற்காக ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

    2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆ.ராசா தனது குடுப்பதினர் மற்றும் நண்பர்களின் பெயர்களுக்கு மாற்றி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

    மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் வேறெந்த வர்த்தகமும் செய்யவில்லை. குருகிராம் நிறுவனத்திடம் இருந்த பெறப்பட்ட பணத்தை வைத்து 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, அமலாக்கதுறை அந்த 45 ஏக்கர் நிலத்தையும் முடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    தமிழ்நாடு

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! இந்தியா
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025