NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
    குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை

    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2025
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    பாகுபலி ஷாவுடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அவர் லோக் பிரகாஷன் லிமிடெட் என்ற நாளிதழின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். அவரது சகோதரர் ஷ்ரேயான்ஷ் ஷா, அந்த நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.

    குற்றச்சாட்டுகளை விவரிக்கும் முறையான அறிக்கையை அமலாக்கத்துறை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கைது அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.

    எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான அரசாங்கம் விமர்சன ஊடகக் குரல்களை குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.

    ராகுல் காந்தி

    ரஹீல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கைது நடவடிக்கையை பகிரங்கமாகக் கண்டித்துள்ளனர்.

    இது ஜனநாயக மதிப்புகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை ஜனநாயகத்தின் குரலை அடக்கும் முயற்சி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அரசாங்கங்கள் சுதந்திர ஊடகங்களை குறிவைக்கும்போது, ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று எச்சரித்தார்.

    மோடி அரசாங்கம் பய அரசியலை நாடுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், அமலாக்கத்துறை இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்ட பின்னரே கைதுக்கான முழு காரணமும் தெரிய வரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்
    குஜராத்
    கைது

    சமீபத்திய

    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி

    அமலாக்கத்துறை

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி? ஜார்கண்ட்

    அமலாக்க இயக்குநரகம்

    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது கைது
    ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்  ஜார்கண்ட்
    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு ஹேமந்த் சோரன்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை டெல்லி

    குஜராத்

    குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட 3,300 கிலோ போதை பொருட்கள் போதைப்பொருள்
    கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் இந்தியா
    வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது  அகமதாபாத்
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல்

    கைது

    ரூ.75,000க்கு போலி டாக்டர் பட்டங்களை விற்ற கும்பல்; குஜராத்தில் 14 போலி டாக்டர்கள் கைது குஜராத்
    'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன் கைது: எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?  அல்லு அர்ஜுன்
    நாடாளுமன்ற அமளிக்காக ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா?  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025