NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி
    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி

    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் கைதுச்செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தார்.

    இதுகுறித்த விசாரணையில் 3ம் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியினை கைது செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து இன்று(ஆகஸ்ட்.,7)உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

    இதனைத்தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது.

    விசாரணை 

    செந்தில் பாலாஜி உடல்நிலையினை அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும்-நீதிபதி அல்லி 

    இதுகுறித்த விசாரணை நீதிபதி.,அல்லி முன்னர் வந்தநிலையில், புழல் சிறையிலிருந்து காணொளிக்காட்சி மூலம் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    விசாரணையின்பொழுது, அமலாக்கத்துறை உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பித்துள்ளது.

    அப்பொழுது அமலாக்கத்துறை விசாரணை நாட்களில் செந்தில்பாலாஜியின் உடல்நிலையினை தினமும் 2முறை காவேரி மருத்துவமனை பரிசோதிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பிலான வழக்கறிஞர், இதே கோரிக்கை உச்சநீதிமன்றத்திலும் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும் என்று தெரிவித்தது என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி.,அல்லி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில் இதுதொடர்பாக வேறுஎந்த உத்தரவும் பிறப்பிக்கமுடியாது. செந்தில் பாலாஜி உடல்நிலையினை அமலாக்கத்துறை கவனித்துக்கொள்ளும் என்றுக்கூறி, ஆகஸ்ட் 12ம்தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    கைது
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    உச்ச நீதிமன்றம்

    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025