NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
    இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023, 04:08 pm 1 நிமிட வாசிப்பு
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
    விமானத்தில் பெண்ணிற்கு நடந்த அவலம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது. இந்த விமானத்தில் முதல் வகுப்பில் உணவிற்கு பிறகு பயணிகள் தூங்க ஏதுவாக விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது போதையில் இருந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதில் அவரது ஆடை, ஷூ, பை போன்றவைகள் நனைந்துள்ளது. பின்னரும் அந்த போதை நபர் அங்கிருந்து நகராமல் ஆபாசமாக நின்றபடி இருந்துள்ளார், பின்னால் வந்து ஒரு நபர் அவரை நகர சொல்லவே, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இது குறித்து பாதிப்படைந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

    புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விமான ஊழியர்கள்-டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதிய பாதிக்கப்பட்ட பெண்

    ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த பெண்ணிற்கு மாற்று உடையும், ஷூவும் கொடுத்து மாற்று இருக்கையில் அமர வைத்துள்ளார்கள். டெல்லி வந்ததும் அந்த நபர் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் கிளம்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதன் பிறகே, ஏர் இந்தியா இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள், "விமானத்தில் நடந்தது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை நபர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசு பரிசீலனையில் உள்ளதால், அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்

    சமீபத்திய

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் கோலிவுட்
    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை கொரோனா
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் காங்கிரஸ்

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023