NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
    விமானத்தில் பெண்ணிற்கு நடந்த அவலம்

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

    இந்த விமானத்தில் முதல் வகுப்பில் உணவிற்கு பிறகு பயணிகள் தூங்க ஏதுவாக விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது.

    அப்பொழுது போதையில் இருந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

    இதில் அவரது ஆடை, ஷூ, பை போன்றவைகள் நனைந்துள்ளது. பின்னரும் அந்த போதை நபர் அங்கிருந்து நகராமல் ஆபாசமாக நின்றபடி இருந்துள்ளார், பின்னால் வந்து ஒரு நபர் அவரை நகர சொல்லவே, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

    இது குறித்து பாதிப்படைந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

    விமானத்தில் நடந்தவை குறித்து விசாரிக்க குழு அமைப்பு

    புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விமான ஊழியர்கள்-டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதிய பாதிக்கப்பட்ட பெண்

    ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த பெண்ணிற்கு மாற்று உடையும், ஷூவும் கொடுத்து மாற்று இருக்கையில் அமர வைத்துள்ளார்கள்.

    டெல்லி வந்ததும் அந்த நபர் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் கிளம்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    இதன் பிறகே, ஏர் இந்தியா இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.

    இது குறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள், "விமானத்தில் நடந்தது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை நபர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் அரசு பரிசீலனையில் உள்ளதால், அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    இந்தியா

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    இந்தியா

    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை கொரோனா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? தமிழ்நாடு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025